Tuesday, April 19, 2011

அரச முகாமைத்துவ இணைந்த சேவை மேலும் 2700 பேரை நியமிக்க அரசு நடவடிக்கை……

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 2700 பேரை விரைவில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் நிலவும் ஐயாயிரம் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் அண்மையில் 2330 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலும் 2700 வெற் றிடங்களுக்கும் நியமனங்களை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்படி அமைச்சு மேற்கொண்டுள்ளது. திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்தே அண்மையில் 2330 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவோரிலிருந்தும் அடுத்த கட்ட நியமனங்கள் வழங்கப்படு மென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட் சையின் பெறுபேறுகள் இதுவரை பொது நிர்வாக உள்நாட்டலு வல்கள் அமைச்சுக்குக் கிடைக்கவில்லை எனவும் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து அந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள வெற் றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச முகாமைத்துவம் இணைந்த சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடை பெற்றன. பல்லாயிரக் கணக்கானோர் இப்பரீட்சைகளில் தோற்றினர். திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக் கொழும்பில் நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2330 பேர் தகுதியானவர்களென தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. கடந்த மாதங்களில் நாடளாவிய ரீதி யில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நேர்முகப் பரீட்சைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைத்திருக்கவில்லை. இத்தகைய காரணங்களினால் விடுபட்ட சுமார் 700 பேருக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. இவர்களை கொழும்புக்கு அழைத்து நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அதன் பின்னர் தகுதியானோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அரச முகா மைத்துவ இணைந்த சேவையில் நிய மனங்கள் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

No comments: