Monday, May 23, 2011

சுவாமிக்கு உதயத்தின் கண்ணீர் அஞ்சலி....!



மட்டக்களப்பு மாதாவின் மடியில் வந்துதித்த சுவாமி விபுலாநந்தர் எடுத்த
பணியைத் தொடர்ந்தவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள்
இராமகிருஷ்னமிஷன் கிழக்கிலங்கை கல்வி அபிவிருத்திக்கு கிறிஸ்தவமிஷன்
போன்று அளப்பரிய பணியை ஆற்றியிருக்கின்றது. கிழக்கில் சகல இனமக்களும்
மதத்தவரும் எந்த வேறுபாடுமற்றவகையில் ஒரே கூரையின்கீழ் கல்வியைப்பெறும்
வாய்ப்பினை மிஷன் வழங்கியது.
சுவாமி ஜீவானந்தாஜீயைத் தொடர்ந்து இப்பணியைப் பொறுப்பேற்று செவ்வனே
செய்தவர் மறைந்த சுவாமிஜீ அவர்கள். இதன்மூலம் ஆதரவற்ற வறிய
மாணவர்களுக்கு கல்விச்செல்வம் ஊட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில்
கிழக்கில் ஏற்பட்ட சுனாமி வெள்ளம் யுத்தப்பாதிப்புக்களின்போது சுவாமி
அஜராத்மாநந்தா அவர்கள் மக்கள் மத்தியில் நின்று ஆற்றிய மகத்தான
பணிகளை மறக்க முடியாது.
சுவாமியின் மறைவையொட்டி துயரில் ஆழ்ந்திருக்கும் அனைத்து இல்ல
மாணவர்களுக்கும் மிஷன் நிர்வாகத்தினருக்கும் ஒரு சமூக ஆன்மீகத்
தலைமத்துவத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்கும் சுவிஸ் வாழ்
உதயம் உறவுகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
சுவாமியின் ஆத்மா சாந்திஅடைய பிராத்திக்கின்றோம்.
உதயம் உறவுகள்
சுவிஸ்