Saturday, November 21, 2009

சிந்தியுங்கள் மக்களே.............

மீண்டும் கிழக்குத் தளபதிகளையும்,போராளிகளையும்
துரோகிகளாக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்
ஆனால் தயா மாஸ்டர் ஜோஜ் மாஸ்டர் இன்னும் எத்தனை
தளபதிகள்,போராளிகள் பற்றி இவர்கள் கூறாதது ஏன்..................

Wednesday, November 18, 2009

அகிம்சையின் வழிகாட்டி ஆசானாக எங்கள் தோழர்....


அன்பினால் அரவணைத்த எங்கள் தோழர்
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்

சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்

கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்
கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்

நல் ஆசான் எங்கள் தோழர்
நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்
நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்

இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்
இமைகளை என்றுமே மூடாத எங்கள் தோழர்
இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்

தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்
தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்

எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்
எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்
என் எனது அறியா எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்

இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழன்
இயல்பாக கூறமுனைந்தால் அவரே
இறுமாப்புடன் உலகிற்கு பறைசாற்றுவோம்
இன்றும் என்றும் இவர் தான்
இதய தெய்வம் எங்கள் தோழர் பத்மநாபா

பத்மநாபாவின் பிறந்தநாள் நினைவிற்காக
பாடுமீன்கள்---கிழக்குமகள் இணையதளங்கள்