Tuesday, March 3, 2009

ஆட்டோ சாரதி மட்டக்களப்பில் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு நகருக்கு வெளியே இன்று நண்பகல் ஆட்டோ சாரதியொருவர் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாடகை நிமித்தம் சின்ன உப்போடைக்கு சென்று திரும்பும் வழியில் லூர்த் மாதா கோவிலுக்கு அருகாமையில் எதிர் கொண்ட துப்பாக்கிதாரிகளினால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்அரசடியைச் சேர்ந்த செல்லத்துரை ரஞ்சித்குமார் (வயது 28 ) என அடையாளம் காணப்பட்டுள்ளர்.இக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

No comments: