Monday, March 2, 2009

திடீர் வேட்டுச் சத்தம் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட வைபவத்தில்

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று நண்பகல் கிழக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்ட வைபவமொன்றின் போது அமைச்சர் ஒருவரின் மெய்க்காப்பாளருடைய துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாலேயே சில நிமிடங்கள் அங்கு பதற்றாமான நிலை காணப்பட்டது.மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா ஆகியோர் காத்தான்குடி கமநல சேவை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மெய்க்காப்பாளருடைய துப்பாக்கி உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டதோடு மேலதிக விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: