தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
Thursday, April 14, 2011
அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது பிரதியமைச்சர் முரளிதரன்.......
தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பாடுமீன்கள் இணையத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
பிறக்கும் புதுவருடம் உலக
மக்கள் அணைவரும்
அமைதியும் சந்தோசத்துடனும்
இனிதே இன்புற்றிருக்க இனிய
வாழ்த்துக்கள் பாடுமீன்கள்
மக்கள் அணைவரும்
அமைதியும் சந்தோசத்துடனும்
இனிதே இன்புற்றிருக்க இனிய
வாழ்த்துக்கள் பாடுமீன்கள்
Wednesday, April 13, 2011
மலரும் புத்தாண்டில் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம்.....
பண்டைய காலம் முதல் இலங்கை யின் பெரும்பான்மையான மக்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு ஒரு மிகப்பெரும் கலாசாரப் பண்டிகையாகும். இப்பண்டிகை பூவுலகிற்கும் மக்களுக்கும் சக்தியை வழங்கும் சூரியனை வழிபடுவதற்கான ஒரு பெருநாள் என்பதோடு, நாட்டின் கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார அடைவுகளுக்கு மேலும் வளம் சேர்க்கும் ஒரு வருடாந்த பெருவிழாவாகும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது, விவசாயத்துறை உட்பட ஏனைய எல்லா துறைகளிலும் உற்பத்தி துரித வளர்ச்சி கண்டுவரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். மேலும் எல்லா மக்களும் எமது தாய்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் நன்மைகளை அனுபவிக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின் றோம். எனவே, இப்புத்தாண்டு எமது மக்களிடம் எதிர்கால முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுவர உதவும். பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இப்புத்தாண்டின் பாரம்பரியங்கள் இக் கொண்டாட்டத்திற்கு மேலும் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் சேர்ப்பதாகவுள்ளது. எமது ¡ழ்க்கை ஒழுங்கில் இப்பெருநாளின் முக்கியத் துவத்தை எமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரான அவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை வழங்க முடியும். இப்புத்தாண்டோடு தொடர்புடைய பல்வேறு சமயச் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களில் எமது பிள்ளைகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் பண்டிகைக் காலங்களில் சகல வகையான மதுபானங்களிலிருந்தும் தூரவிலகியிருக்குமாறு நான் உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இது இப்பெருநாள் தினத்தின் மகிழ்ச்சியை எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முழுமையாகக் கிடைக்கச் செய்வதில் பெரும் பங்களிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். நாட்டினதும் மக்களினதும் பாதுகாப் புக்காக புதுவருட காலத்தில் சேவை யில் ஈடுபட்டிருக்கின்ற முப்படை யினருக்கும் பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Saturday, November 21, 2009
சிந்தியுங்கள் மக்களே.............
Wednesday, November 18, 2009
அகிம்சையின் வழிகாட்டி ஆசானாக எங்கள் தோழர்....

அன்பினால் அரவணைத்த எங்கள் தோழர்
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்
சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்
கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்
கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்
நல் ஆசான் எங்கள் தோழர்
நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்
நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்
இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்
இமைகளை என்றுமே மூடாத எங்கள் தோழர்
இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்
தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்
தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்
எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்
எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்
என் எனது அறியா எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்
இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழன்
இயல்பாக கூறமுனைந்தால் அவரே
இறுமாப்புடன் உலகிற்கு பறைசாற்றுவோம்
இன்றும் என்றும் இவர் தான்
இதய தெய்வம் எங்கள் தோழர் பத்மநாபா
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்
சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்
கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்
கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்
நல் ஆசான் எங்கள் தோழர்
நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்
நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்
இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்
இமைகளை என்றுமே மூடாத எங்கள் தோழர்
இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்
தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்
தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்
எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்
எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்
என் எனது அறியா எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்
இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழன்
இயல்பாக கூறமுனைந்தால் அவரே
இறுமாப்புடன் உலகிற்கு பறைசாற்றுவோம்
இன்றும் என்றும் இவர் தான்
இதய தெய்வம் எங்கள் தோழர் பத்மநாபா
பத்மநாபாவின் பிறந்தநாள் நினைவிற்காக
பாடுமீன்கள்---கிழக்குமகள் இணையதளங்கள்
பாடுமீன்கள்---கிழக்குமகள் இணையதளங்கள்
Subscribe to:
Posts (Atom)
