Monday, March 2, 2009

இந்திய மத்திய அரசின் கூற்றுக்குத் தமிழ் நாட்டின் அழுத்தமே காரணம் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டால் போர்நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்" அவர் மேலும் கூறியதாவது தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க தயாரில்லை என்பது புலப்படுகின்றது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகம் சற்று தணிந்துள்ளது. காரணம் பொது மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையாகும். அந்த மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் ஊடாக முறையாக கிடைக்கப்பெறும் உதவிகளை நாம் பெற்றுக்கொள்வோம். அந்தவகையில் இந்தியாவின் மருத்துவ உதவியையும் வரவேற்கின்றோம். என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்

No comments: